செப். 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

செப். 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!

செப். 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!

உத்தர பிரதேச மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதை அடுத்து, வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்க ு பள்ளிகள் திறக்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் நிலைமைக்கு ஏற்ப மாநில அரசுகள் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளைத் திறந்து வருகின்றன.

ஒருசில மாநிலங்களில் ஏற்கனவே மேல்நிலை மற்றும் உயர்நிலை மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும், ஆன்லைன் வாயிலாகவும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, வரும் 23ம் தேதி முதல் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதே போல், வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என உத்தர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.


உத்தர பிரதேச மாநிலத்தில், 9-ம் வகுப்பு முதல் 12ம் முதல் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad