ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு: 2 பெண்கள் அதிரடி கைது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு: 2 பெண்கள் அதிரடி கைது!

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு: 2 பெண்கள் அதிரடி கைது!

கேரள மாநிலத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு கொடுத்த 2 பெண்களை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதை அடுத்து தலிபான் அமைப்புக்கு ஆதரவு கொடுக்கும் நபர்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூரில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு கொடுத்த 2 பெண்களை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர். இன்று காலை 6 மணி அளவில் ஷீபா ஹாரிஸ் மற்றும் மிசா சித்திக் இருவரையும் அவரவர் வீடுகளில் வைத்து கைது செய்த அதிகாரிகள், பின் அவர்களை இணைய வாயிலாக நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

சில நாட்களுக்கு முன் இவர்களின் கூட்டாளியான அன்வர் கைது செய்யப்பட்ட தகவலை ஐ.எஸ்., அமைப்பிற்கு தெரியப்படுத்த முயற்சி செய்ததற்காக இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியானதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இவர்களை தலைநகர் டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த, தேசிய புலனாய்வு அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad