பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இந்தியாவில், இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் பெகாசஸ் என்ற மென் பொருள் மூலம், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மூத்த பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த பிரச்னையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரண்டு அவைகளிலும் தொடர்ந்து எழுப்பியதால், நாடாளுமன்றம் முடங்கியது. இதை அடுத்து, பெகாசஸ் விவகாரத்தில் நீதி விசாரணைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில் இன்று, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது. அப்போது, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் தனி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் குறித்து மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் 10 நாட்களுக்கு பிறகு ஒட்டுக் கேட்பு விவகாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் உச்சநீதிமன்ற நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad