மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிப்பு!
மாநிலங்களவையில் தமிழகத்துக்கு மூன்று இடங்கள் காலியாக உள்ளன. ஆனால், கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாநிலங்களவை தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. தமிழகத்தில் காலியாக இருக்கக்கூடிய
இடங்களில் ராஜ்யசபா தேர்தலை உடனடியாக மொத்தமாகவோ அல்லது தனித்தனியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து, தமிழ்நாட்டின் ஒரு இடத்துக்கான மாநிலங்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அதிமுகவின் முகமது ஜானின் மறைவை தொடர்ந்து அந்த இடத்துக்கான இடைத்தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்துக்கான மாநிலங்களவை தேர்தல்
செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர் நலப்பிரிவின் இணைச் செயலாளராக இருக்கும் புதுக்கோட்டையை சேர்ந்த எம்.எம்.அப்துல்லா மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment