கொடநாடு வழக்கு: தள்ளி வைத்த உதகை நீதிமன்றம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 27, 2021

கொடநாடு வழக்கு: தள்ளி வைத்த உதகை நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு: தள்ளி வைத்த உதகை நீதிமன்றம்!


2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொடநாடு எஸ்டேட் காவலாளியை கொலை செய்து கொள்ளை சம்பவம் நடந்தது.
இந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த சயானுக்கு தொடர்பு என காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய முக்கிய எதிரிகளான கனகராஜ், சயான் ஆகிய இருவரும் அடுத்தடுத்து விபத்தில் சிக்கினர். வழக்கில் தேடப்பட்டு வந்த கனகராஜ் சேலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கொடநாடு வழக்கில் சயான், தனபாலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை உதகை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் உதகை நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்தரப்பு சாட்சி விசாரணை செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.

கொடநாடு எஸ்டேட் மேலாளர், மின்சாரத்துறை அதிகாரி, தடயவியல் நிபுணர் ஆகியோர் செப்டம்பர் 2ஆம் தேதி ஆஜராக உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சயான் அளித்த ரகசிய வாக்குமூலம் காரணமாக மீண்டும் கவனம் பெற்றுள்ளது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு. இதனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டென்ஷனாகியுள்ளார். இந்த வழக்கு விசாரணை தமிழக அரசியல் களத்திலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad