அதிரும் அரசியல் களம்: ஆளுநருடன் ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., நாளை சந்திப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

அதிரும் அரசியல் களம்: ஆளுநருடன் ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., நாளை சந்திப்பு!

அதிரும் அரசியல் களம்: ஆளுநருடன் ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., நாளை சந்திப்பு!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை சந்திக்கின்றனர்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவை வளாகத்திற்கு முன்பு, அ.தி.மு.க.,வினர் அமளியில் ஈடுபட்டனர். கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவைக்கு வெளியே பதாகைகளை ஏந்தி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பேரவையை இரண்டு நாட்கள் அ.தி.மு.க., புறக்கணிப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கோடநாடு வழக்கில் தன்னையும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களையும் சேர்க்க சதி நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை சந்திக்கின்றனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 11.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad