'பாலியல் பாஜகவிடமிருந்து தமிழகத்தைக் காக்கும் போராட்டம் தொடரும்' - ஜோதிமணி எம்பி
ஆபாச வீடியோ மற்றும் பாலியல் குற்றசாட்டுகளுக்குள்ளான பாஜகவை சேர்ந்த கே.டி. ராகவன் ராஜினாமா செய்ததையடுத்து தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக இன்று சென்னையில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ்
கமிட்டியின் மாநில மகளிர் அணி தலைவர் சுதா தலைமையேற்றார். முன்னதாக இதுகுறித்து சுதா வெளியிட்டிருந்த அறிவிப்பில் தமிழக பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
அதில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம் (எ) காம லாலயம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். எனவே, பாலியல் கொடூரன், பாஜகவின் முன்னாள் மாநில பொது செயலாளர் கே.டி. ராகவனை கைது செய்ய வேண்டும்.
தனது கட்சி பெண் நிர்வாகிகளின் மானத்தை பாதுகாக்க தவறிய தமிழக பாஜக தலைவர்
அண்ணாமலை உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அதுவரை எங்களது போராட்டம் ஓயாது'' என காட்டமாக கூறியிருந்தார். அதன்படி, பாஜக கட்சி தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய எம்பி ஜோதிமணி உள்ளிட்ட பெண் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து கொண்டு சென்றனர்.
No comments:
Post a Comment