ஆளுநர் பன்வாரிலால் புராேகித்துக்கு கூடுதல் பொறுப்பு! - குடியரசு தலைவர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 27, 2021

ஆளுநர் பன்வாரிலால் புராேகித்துக்கு கூடுதல் பொறுப்பு! - குடியரசு தலைவர் அறிவிப்பு!

ஆளுநர் பன்வாரிலால் புராேகித்துக்கு கூடுதல் பொறுப்பு! - குடியரசு தலைவர் அறிவிப்பு!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புராேகித்துக்கு, பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார்.

பஞ்சாப் மாநில ஆளுநரும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் இருந்து வந்த வி.பி.சிங் பட்னோரின் பதவிக்காலம் கடந்த 20ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று, பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழக ஆளுநர் பதவியுடன், இந்த பொறுப்புகளை, கூடுதல் பொறுப்பாக பன்வாரிலால் புரோகித் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad