அரசின் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள்; வெளியான சூப்பர் உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

அரசின் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள்; வெளியான சூப்பர் உத்தரவு!

அரசின் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள்; வெளியான சூப்பர் உத்தரவு!

கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் அவர்களுக்கு வேலைக்கான அழைப்பு கடிதம் வந்தது. அதில், தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்படி கூறப்பட்டிருந்தது. நீதிபதிக்கே வேலைவாய்ப்பு கடிதம் அனுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதனை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வைத்தியநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதில், நீதிபதிகள் உத்தரவின்பேரில் சிபிசிஐடி சைபர் கிரைம் குற்றப்பிரிவு விசாரணை நடத்தியது.

பல லட்ச ரூபாய் மோசடி

இதையடுத்து விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். அதில், பாரதிராஜா என்ற பொறியியல் பட்டதாரி தன்னிடம் பணம் பறிக்க முயற்சித்த போலி நிறுவனத்திற்கு வேண்டுமென்றே நீதிபதியின் முகவரி மற்றும் மொபைல் எண்ணை அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட போலி நிறுவனம் 80 பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 9.28 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கொரோனா நெருக்கடி

உடனே களத்தில் இறங்கிய போலீசார் சித்ரா என்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரதாப் மற்றும் ராஜ் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்த போது, கொரோனா ஊரடங்கு பாதிப்பால் பலர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். பொருளாதார இழப்பு அனைத்து தரப்பினரையும் வாட்டியுள்ளது.

சுய வேலைவாய்ப்பு திட்டங்கள்

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் முளைத்துள்ளன. இவர்கள் இளைஞர்களை ஆசை வார்த்தை கூறி மோசடியில் இறங்கி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே ஒருவர் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளனர். இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad