ஆயுள் வரை செல்லும்: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு குட் நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

ஆயுள் வரை செல்லும்: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு குட் நியூஸ்!

ஆயுள் வரை செல்லும்: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு குட் நியூஸ்!

மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மாணவர்களுக்கான அடிப்படைக் கல்வி மற்றும் ஆசிரியர்களின் கல்வித் தகுதியில் பல்வேறு விதிகள் ஏற்படுத்தப்பட்டு, அதில் ஒன்றாக, அனைத்து மாநிலங்களிலும் பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்ச ி பெற்றிருக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது.

இந்தத் தேர்வுக்கான சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லத்தக்கது என்றும், அதற்குள் பணிக்குச் சேராதவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதியும் இருந்தது. இதன் காரணமாக, ஏழு ஆண்டுகளாக ஆசிரியர் பணி கிடைக்காதவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET - டெட்) தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே அதற்கான சான்றிதழ் செல்லும் என்ற விதி இருந்த நிலையில், கடந்த ஆண்டு தேசிய ஆசிரியர் கல்விக்குழு அதில் மாற்றம் செய்திருந்தது. மத்திய கல்வி அமைச்சகமும் இதுகுறித்த அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் நாள்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோருக்கு, ஆயுள் முழுவதும் செல்லும் வகையில் சான்றிதழ் அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad