செப். 1 முதல் 4, 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

செப். 1 முதல் 4, 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!

செப். 1 முதல் 4, 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!

ஹரியானா மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதை அடுத்து ஊரடங்கில் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளை மாநில அரசுகள் திறந்து வருகின்றன.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகள் வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படும் என்றும், சமூக இடைவெளி, முகக் கவசம் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹரியானா மாநிலத்தில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் 16ம் தேதியும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த ஜூலை மாதம் 23ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad