ஊரடங்கு நீட்டிப்பு: வார இறுதி நாட்களில் கட்டுப்பாடு..!
தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதி வரை தளர்வுகளுடன் கூறிய ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கூடவே செப்டம்பர் 15ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்
விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே திட்டமிட்டப்படி 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, மத வழிப்பாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பொது இடங்களில் சிலைகளை அமைக்கவும், சிலைகளை ஊர்வலமாக கொன்று சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதே சமயம், வீடுகளில்
வைத்து கொண்டாடப்படும் சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என்பதை அரசு இந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
சென்னை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் இதர இடங்களில் கிறித்தவர்களால் கொண்டாப்படவுள்ள மரியன்னையின் பிறந்த நாள் திருவிழாவின்போது பொது இடங்களில்
மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவில் குறிப்பிட்டுள்ள அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் வழிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
No comments:
Post a Comment