புதிய ஐ.டி. விதிகளுக்கு எதிராக பேஸ்புக், வாட்ஸ் அப் மனு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

புதிய ஐ.டி. விதிகளுக்கு எதிராக பேஸ்புக், வாட்ஸ் அப் மனு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

புதிய ஐ.டி. விதிகளுக்கு எதிராக பேஸ்புக், வாட்ஸ் அப் மனு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

புதிய தகவல் மற்றும் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து பேஸ்புக், வாட்ஸ் அப் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட தகவலை முதலில் பகிர்ந்தது யார் என்பதை கண்டறிவது, குறிப்பிட்ட உரையாடல்கள் குறித்த தகவல்களை மத்திய அரசிடம் பகிர்ந்து கொள்வது போன்றவை புதிய தகவல் மற்றும் தொழில்நுட்ப விதிகள் மூலமாக வழிவகை செய்யப்பட்டு உள்ளது. 'இது தனியுரிமையில் தலையிடுவது போல் உள்ளது. அரசியலமைப்புக்கு எதிரானது' எனக் கூறி, புதிய விதிகளுக்கு எதிராக பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல், ஜோதி சிங் ஆகியோர் கொண்ட அமர்வு, இது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தில் முக்கிய வழக்கறிஞர் இல்லை எனக்கூறி வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை விடுத்தார்.

பேஸ் புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் சார்பு வழக்கறிஞர்கள் ஹரிஸ் சால்வே, முகுல் ரோஹத்கி ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கின் விசாரணை அக்டோபர் மாதம் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad