தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 30, 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு?

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு?

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், வருகிற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கல்லூரிகளும் அன்றைய தேதியில் இருந்து திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை ஆயத்தமாகி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும். வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், ஆசியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க இயலாத சூழல் நிலவுதால் பாடத்திட்டங்களை 50 சதவீதம் வரை குறைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதம் உச்சம் தொடும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளை அவசரப்பட்டு திறக்க வேண்டாம் என்று எய்ம்ஸ் பேராசிரியரும், மருந்து துறையின் தலைவருமான நவீத் விக் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, பள்ளிகளை திறந்த வேறு சில மாநிலங்களில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் குறிப்பிட்ட சில பள்ளிகள் மூடப்பட்டன. எனவே, மாணவர்களின் நலன் கருதி இந்த விஷயத்தில் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களிடம் சரீர விலகலை பின்பற்ற சொல்வது, அவர்களுக்கு தடுப்பூசி போடப்படாதது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சுட்டிக் காட்டி பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad