எல்லோரும் தூங்கும்போது எதுக்கு இரவு ஊரடங்கு? பள்ளிகள் திறப்பு அச்சமாக உள்ளது - சீமான் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 30, 2021

எல்லோரும் தூங்கும்போது எதுக்கு இரவு ஊரடங்கு? பள்ளிகள் திறப்பு அச்சமாக உள்ளது - சீமான்

எல்லோரும் தூங்கும்போது எதுக்கு இரவு ஊரடங்கு? பள்ளிகள் திறப்பு அச்சமாக உள்ளது - சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் தரப்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவரது பேட்டி பின்வருமாறு;
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா? எதிர்கிறீர்களா? என்று எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வத்திடம் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய ஓ. பன்னீர்செல்வம்,'' நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் என் தற்போதைய நிலைமை என்ற பாடல் வரியை குறிப்பிட்டுள்ளார்?

அதற்கு நான் என்ன சொல்ல என்று நகைத்த சீமான், ஓபிஎஸ் அவருடைய நிலையை கவிதை மூலம் விளக்கியுள்ளார். அதை அப்படியே விடுங்க என பதிலளித்தார்.

குடிசை மாற்று வாரிய வீடுகள் பல தொட்டாலே உதிருகிறது?

நீங்க ஏன் தொடுறீங்க? அந்த அளவிற்கு நம்ம ஆட்சியாளர்களுடைய அமைப்பு அப்படி இருந்துள்ளது. குடிசையில் உறங்கிக்கொண்டிருந்தாலும் கூட உயிருடன் எழுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அரசு கட்டிக்கொடுத்துள்ள கட்டடத்தில் இருப்பவர்களுக்கு காலையில் இருப்போமா இல்லையா என்ற பயம் ஏற்பட்டுள்ளது. ஒரு வெள்ளமோ, புயலோ வந்தால் அப்படியான கட்டடங்கள் என்னவாகும்? நீரில் ஊறி சரிந்துவிடாதா? இப்போது மேம்பாலம் கட்டிக்கொண்டிருக்கும்போதே பின்னாடியே இடிந்து விழுகிறது.இதெல்லாம் கேட்டால் மலை மணலில் சிக்கல் இருப்பதாக கூறுகின்றனர். 5 லட்சம் கடன் என்கின்றனர், அந்த கடன் எப்படி ஏற்பட்டது? எந்தெந்த துறையில் என்னென்ன கடன் இருகிறது என்பதை தெரளிவுபடுத்த வேண்டும். ஆனால், அவர்களது வீடுகளில் எத்தனை லட்சம் கோடி இருக்கிறது யாருக்கு தெரியும்?



குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் வீடு பெற்றவர்கள் தவணை முறையில் 1.50 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்று உள்ளது?

குடிமக்களின் அத்தியாவசியத்தை அரசுதான் பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி இல்லையெனில் அவர்களது அத்தியாவசியத்தை அவர்களே பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய வாய்ப்பை பெற வேண்டும்.
அந்த 1.50 லட்சம் ரூபாய் இருந்தால் அவர்களது குடிசையை அவர்கள் மேம்படுத்திக்கொள்வார்கள் தானே.

செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கும் முயற்சி?

அதனை நான் அச்சத்துடன்தான் பார்க்கிறேன். கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகமாகிவிட்டது. அதனால் இரவில் ஊரடங்கை போட்டுள்ளனர். இரவில் அனைவரும் வீடுகளில் அடங்கிடும்போது எதற்கு இரவு ஊரடங்கு? பகலில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. ஆனால், மக்கள் ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என சீமான் இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad