"நீங்க கேட்ட சிகிச்சை ஜெயில்லயே கிடைக்கும்!" - சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமின் தள்ளுபடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

"நீங்க கேட்ட சிகிச்சை ஜெயில்லயே கிடைக்கும்!" - சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமின் தள்ளுபடி!

"நீங்க கேட்ட சிகிச்சை ஜெயில்லயே கிடைக்கும்!" - சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமின் தள்ளுபடி!

பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

16 வயது சிறுமியை பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிறையில், சாமியார் ஆசாராம் பாபு அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆயுர்வேத சிகிச்சை செய்து கொள்வதற்காக, உச்ச நீதிமன்றத்தில் அவர் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வி. ராமசுப்ரமணியன், பெலா எம்.திவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. இந்த வழக்கில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆசாராம் பாபு சிகிச்சை என்ற போர்வையில் தண்டனையில் இருந்து தப்பிக்க நினைப்பதாகக் கூறினார்.

அதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையும் ஆசாராம் பாபுவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கூடாது என்று முறையிட்டார். அவருக்கு ஜாமின் வழங்கினால் தங்களின் குடும்பத்தார் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீங்கள் ஒன்றும் சாதாரண குற்றத்துக்காக சிறையில் இல்லை. அதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான ஆயுர்வேத சிகிச்சை சிறையிலேயே கிடைக்கும். உங்களுக்கு ஜாமின் வழங்க முடியாது. உங்களது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad