"இதுக்கு முற்றுப்புள்ளி வையுங்க!" - முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
பொது மக்களுக்கு இடையூறாக பேனர், வரவேற்பு வளைவுகள் வைக்கக்கூடாது என்ற தனது வேண்டுகோளை தி.மு.க.,வினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல்
ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கட்சி நிகழ்ச்சிகளுக்காக
பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொது மக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்து விடுகிறது.
No comments:
Post a Comment