ஒன் டைம் யூஸ் பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் தொழில் உரிமம் ரத்து..! - சென்னை மாநகராட்சி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

ஒன் டைம் யூஸ் பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் தொழில் உரிமம் ரத்து..! - சென்னை மாநகராட்சி

ஒன் டைம் யூஸ் பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் தொழில் உரிமம் ரத்து..! - சென்னை மாநகராட்சி

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அது தொடர்பாக வெளியான சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ''தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல் சேமித்து வைத்தல் விநியோகித்தல் விற்பனை செய்தல் உபயோகித்தல் ஆகியவற்றிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாணையின்படி ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவு பொருட்களை கட்ட பயன்படுத்துதல் பிளாஸ்டிக் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மாகோல் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இல்லை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி /உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில் மர பொருட்கள், காகித குழல்கள், துணி காகிதம் சணல் பைகள் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம்'' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad