அடங்க மறுக்கும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

அடங்க மறுக்கும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிப்பு!

அடங்க மறுக்கும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிப்பு!

ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து ஆறாவது முறையாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் கோரப்பிடியில் ஆஸ்திரேலியா சிக்கி உள்ளது. டெல்டா வகை கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது. மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ள போதிலும், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மெல்போர்னில், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட மெல்போர்ன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே தொடர்ந்து 4 வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து விக்டோரியா மாகாணத்தின் பிரதமர் டான் ஆண்ட்ரூஸ் கூறுகையில் ‘‘ஊரடங்கை திரும்ப பெற முடியாத அளவுக்கு மெல்போர்ன் நகரில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்குக்கு முன்பான சுதந்திரத்தை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறோம். மீண்டும் அந்த நாட்கள் திரும்பி வர வேண்டும் என தீவிரமாக விரும்புகிறோம்’’ என கூறினார். மெல்போர்னில் எத்தனை நாட்கள் மீண்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. கொரோனா குறைந்த பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம்.

ஆஸ்திரேலியாவில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மந்த கதியில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சிட்னி உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மெல்போர்ன் நகரில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad