ஆப்கானிஸ்தானுக்கு மீட்பு பணிக்கு சென்ற விமானம் கடத்தல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

ஆப்கானிஸ்தானுக்கு மீட்பு பணிக்கு சென்ற விமானம் கடத்தல்!

ஆப்கானிஸ்தானுக்கு மீட்பு பணிக்கு சென்ற விமானம் கடத்தல்!

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு மீட்புப் பணிக்காக சென்ற உக்ரைன் நாட்டு விமானத்தை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இதை அடுத்து அங்குள்ள தங்கள் நாட்டில் வசிக்கும் மக்களை உலக நாடுகள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வருகின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்க உக்ரைன் அரசு, விமானம் ஒன்றை ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தது. அந்த விமானம் காபூலில் இருந்து உக்ரைன் நாட்டு மக்களை மீட்டு சொந்த நாட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தது.

அப்போது, விமானத்தில் இருந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் அடங்கிய கும்பல் விமானத்தை கடத்தியது. விமானம் தற்போது ஈரான் நாட்டிற்கு கடத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து உக்ரைன் அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, உக்ரைன் நாட்டின் விமானத்தை நாங்கள் கடத்தவில்லை என, ஈரான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad