பாராதியார் படித்த பள்ளியில் இப்போதும் அவர் நூற்றாண்டு நினைவு ஜோதி ஓட்டம்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 29, 2021

பாராதியார் படித்த பள்ளியில் இப்போதும் அவர் நூற்றாண்டு நினைவு ஜோதி ஓட்டம்...

பாராதியார் படித்த பள்ளியில் இப்போதும் அவர் நூற்றாண்டு நினைவு ஜோதி ஓட்டம்...

செப்டம்பர் 11ஆம் தேதி நூற்றாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மகாகவி சுப்ரமணிய பாரதியார் பள்ளிப்படிப்பை பயின்ற நெல்லை சந்திப்பில் உள்ள மதிதா இந்து மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவு தின தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி பாரதியாரின் தந்தை பிறந்த ஊரான சீவலப்பேரியிலிருந்து நெல்லை சந்திப்பில் உள்ள பாரதியார் பயின்ற மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி வரை தொடர் நினைவு தின ஜோதி ஓட்டம் நடைபெற்றது.

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கைகளில் ஜோதியை ஏந்தி சீவலப்பேரியிலிருந்து பர்கிட் மாநகரம், பாளையங்கோட்டை முருகன்குறிச்சி வண்ணாரப்பேட்டை வழியாக பள்ளியை வந்தடைந்தனர். பின்னர் நினைவுதின ஜோதியை பள்ளியின் நிர்வாக குழு செயலாளர் செல்லையா விடம் ஒப்படைத்தனர்.

அதன்பின் அந்த ஜோதி பாரதியார் படித்த வகுப்பறையில் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர் ஜோதி ஓட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.



செப்டம்பர் 5ஆம் தேதி பாரதியார் நூற்றாண்டு விழா மராத்தான் போட்டியும், 11ஆம் தேதி கவிதைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad