ஊரடங்கில் திடீர் கட்டுப்பாடு: தமிழக அரசு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

ஊரடங்கில் திடீர் கட்டுப்பாடு: தமிழக அரசு அறிவிப்பு!

ஊரடங்கில் திடீர் கட்டுப்பாடு: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சமீபத்தில் பாதிப்புகள் திடீரென அதிகரித்தாலும் உடனடியாக எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளில் பாதிப்பு மீண்டும் சரிவைச் சந்தித்தது.
தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 1500 என்ற அளவில் உள்ளது. இதனாலே தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், மதுபான பார்கள் திறப்பிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கோயில்கள் திறப்பில் உள்ள கட்டுப்பாடு தொடரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளி , சனி, ஞாயிறு ஆகிய மூன்று கிழமைகளில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற நிலையே தொடரும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள் திறந்து ஒருவாரம் கடந்தபின் கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டு தலம் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறப்பு குறித்து மருத்துவத்துறை, வருவாய் பேரிடர் நிர்வாகத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad