இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய மாவட்டம் எது தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 16, 2021

இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய மாவட்டம் எது தெரியுமா?

இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய மாவட்டம் எது தெரியுமா?

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நான்காவது கட்டமாக மே மாதம் முதல் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அங்கு தற்போது நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இதை அடுத்து கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் தகுதி உடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

வயநாட்டில் 6.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 6.16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், பிற நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வரும் 636 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. வயநாடு மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad