செப்டம்பர் மாத தொடக்கம் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 30, 2021

செப்டம்பர் மாத தொடக்கம் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்!

செப்டம்பர் மாத தொடக்கம் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு பருவக் காற்று காரணமாக ஆகஸ்ட் 30ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (ஆகஸ்ட் 31) வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 1ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 2, 3ஆகிய தேதிகளில் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் (கோவை), வால்பாறை (கோவை), தலா 4, குழித்துறை (கன்னியாகுமரி), அவலாஞ்சி (நீலகிரி) தலா 3, தேக்கடி (தேனி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), பந்தலூர் (நீலகிரி) தலா 2, சென்னை விமான நிலையம், பெரியாறு (தேனி), ராதாபுரம் (திருநெல்வேலி, போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), தொழுதூர் (கடலூர்) 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad