"ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை!" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 29, 2021

"ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை!" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு!

"ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை!" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு!

ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்து உள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தர பிரதேச மாநிலத்திற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் ஜென்மாஸ்டமியை முன்னிட்டு, இன்று அயோத்தி ராம் லல்லா கோவிலில், அவர் வழிபாடு நடத்தினார். இதன் மூலம் இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அயோத்தி ராம் கதா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராமாயண மேளாவை தொடங்கி வைத்தார்.

அதன் பின் அவர் பேசியதாவது:


ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை. ராமர் இருக்கும் இடத்தில் அயோத்தி உள்ளது. ராமர் இந்த நகரத்தில் நிரந்தரமாக வசிக்கிறார். எனது முன்னோர்கள் எனக்கு பெயர் வைத்த போது அவர்கள் ராமர் மீது எவ்வளவு மரியாதை பாசம் என்பதை உணர்கிறேன். இது பொது மக்களிடையே காணப்படுகிறது.

அயோத்தியின் உண்மையான அர்த்தம், யாராலும் போர் செய்ய முடியாத இடம். ரகு வம்ச மன்னர்களான ரகு, திலீப், அஜ், தஷ்ரத் மற்றும் ராம் ஆகியோரின் தைரியம் மற்றும் சக்தி காரணமாக, அவர்களின் தலைநகரம் வெல்ல முடியாததாகக் கருதப்பட்டது. எனவே, இந்த நகரத்தின் பெயர் 'அயோத்தி' எப்போதும் பொருத்தமானதாக இருக்கும்.

ராமாயணத்தை, கலை மற்றும் கலாசாரம் மூலம் சாதாரண மக்களிடம் கொண்டு செல்ல ராமாயண கருத்தரங்கை ஏற்பாடு செய்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது குழுவினரை பாராட்டுகிறேன். ராமாயணத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியமானது. அதில் உள்ள தத்துவங்களுடன் ராமாயணம், நமது வாழ்க்கையை வழிநடத்த தேவையான அனைத்து நடத்தை விதிமுறைகளை வழங்குகிறது.

ஆன்மிக மற்றும் கலாசார சுற்றுலாவை ஊக்குவிக்க இந்நிகழ்ச்சி மிகவும் முக்கியம். ராம ராஜ்ஜியத்தில் பாகுபாடு கிடையாது. தண்டனை சட்டமும் கிடையாது. ராம் இருக்கும் இடத்தில் தான் அயோத்தி உள்ளது. ராமர் இந்த நகரத்தில் வசிக்கிறார். எனவே தான், இந்த இடம் உண்மையில் அயோத்தி.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad