பாஜக அண்ணாமலையும் மத்திய அமைச்சர் முருகனும் மாஸ்க்கூட அணியாமல் ஆபத்தை உருவாக்கி வருகின்றனர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

பாஜக அண்ணாமலையும் மத்திய அமைச்சர் முருகனும் மாஸ்க்கூட அணியாமல் ஆபத்தை உருவாக்கி வருகின்றனர்!

பாஜக அண்ணாமலையும் மத்திய அமைச்சர் முருகனும் மாஸ்க்கூட அணியாமல் ஆபத்தை உருவாக்கி வருகின்றனர்!

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் பகுதியில் உள்ள டீ கடையில் மத்திய இணை அமைச்சர் முருகன் டீ குடித்தார். அப்போது அவருடன் ஏராளமான தொண்டர்கள் பாஜக தமிழ்நாடு தலைவர்கள் உடனிருந்தனர்.
இதில் 90 சதவீதம் பேர் கொரோனா என்ற ஒன்றை மறந்து மாஸ்க் அணியாமல், தனிமனித இடைவெளி என்பதை மறந்து கொரோனாவை பரப்பி வருகின்றனர். பாஜக முன்னாள் மாநில தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல் முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மக்கள் ஆசி யாத்திரையை நேற்று முன்தினம் கோவையில் துவக்கினர்.

கோவையில் அதிகளவு கூட்டத்தைக் கூட்டி, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பாஜக நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இந்த சூழலில் இதன் தொடர்ச்சியாக தாராபுரம் சென்றார் புதிய மத்திய அமைச்சர் எல் முருகன்.

தொடர்ந்து அங்கிருந்து காங்கேயம் சென்று கொண்டிருந்தார் எல் முருகன். அப்போது வழியில் ஊதியூர் பஸ் நிறுத்தம் பகுதியில் திடீரென வாகனத்தை எல் முருகன் நிறுத்த அறிவுறுத்தியுள்ளார்.



அப்போது அங்கிருந்த தெருவோர டீ கடைக்குச் சென்று தனது ஆதரவாளர்களுடன் டீ அருந்தியுள்ளார். இந்த நிகழ்வின்போது மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பாஜகவினரால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad