FACT CHECK: குடி போதையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அலப்பறை செய்து கைது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

FACT CHECK: குடி போதையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அலப்பறை செய்து கைது!

FACT CHECK: குடி போதையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அலப்பறை செய்து கைது!

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்து போலி செய்திகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதேபோல், தங்களது செய்திகளை படிக்க வேண்டி, சில மீடியா சேனல்களும் ஒரு ஹைப்புக்காக ஏதாவது ஒன்றை தலைப்பில் சொல்லி வாசகர்களை இழுத்து வருகின்றன.
பரவும் செய்தி

அந்த வகையில், “குஜராத்தில் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற போது கையும் களவுமாக பிடிபட்ட ராகுல் காந்தி” என்ற தகவலுடன் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கதிர் நியூஸ் எனும் அந்த நியூஸ் கார்டானது வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த நியூஸ் கார்டை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிரும் பலரும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி என்று நினைத்துக் கொண்டு கமெண்ட் செய்து விமர்சித்து வருகின்றனர். ஒரு சிலரோ கைதானவர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இல்லை என்று தெரிந்து கொண்டே வேண்டும் என்றே அவரது பெயரிலான ஹேஷ்டேக்கில் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன

சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில் அந்த தகவல் போலியானது என்ற ு தெரிய வந்துள்ளது. அத்துடன், கைதானவர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

சரிபார்ப்பு வழிமுறை

இது தொடர்பாக முக்கிய வார்த்தைகளை கொண்டு இணையதளத்தில் தேடிய போது, அது தொடர்பான பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில், “குஜராத் மாநிலத்தின் பானஸ்காம் எனும் பகுதியைச் சேர்ந்த ராகுல் காந்தி என்ற நபர் சூரத் காதொதரா சாலையில் காரில் குடித்து விட்டு தொல்லை கொடுத்ததாக அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன்பின்னர் ஜாமீனில் அவர் வெளியே வந்து விட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

Post Top Ad