1-8ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பு; அமைச்சர் சொன்ன உறுதியான தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 23, 2021

1-8ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பு; அமைச்சர் சொன்ன உறுதியான தகவல்!

1-8ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பு; அமைச்சர் சொன்ன உறுதியான தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அரசுப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக கல்வி தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. தொடக்கத்தில் பல்வேறு சிரமங்களை சந்தித்த பள்ளி மாணவர்கள், அதன்பின்னர் படிப்படியாக பழகிக் கொண்டனர். இருப்பினும் போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாத மாணவர்கள் சரியான கற்றலை பெற முடியாமல் தவித்தனர். தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பெரிதும் குறைந்திருக்கிறது.


தமிழக அரசு நடவடிக்கை

தினசரி பாதிப்புகள் தொடர்ந்து இறங்குமுகமாக காணப்படுகிறது. இதையொட்டி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

பள்ளிகள் திறப்பு எப்போது?

பல மாதங்களாக மாணவர்கள் வீட்டிலேயே இருந்ததால், அவர்களை பள்ளிச் சூழலுக்கு ஏற்ப தயார் செய்யும் வகையில் 45 நாட்கள் புத்துணர்வு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கையும், தொடர்ச்சியான பண்டிகை காலங்களும் வருவதால் வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை

எனவே அவசரம் காட்ட வேண்டாம் என்று பல்வேறு தரப்பினரும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் தொடக்கப் பள்ளிகளை திறப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார். பின்னர் இதுதொடர்பான ஆய்வறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்பித்தார். இதனைக் கருத்தில் கொண்டு விரைவில் அறிவிப்புகள் ஏதும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளைத் திறக்க இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பெற்றோர் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளிகள் திறப்பு பற்றி எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின்னரே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad