ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்; உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 23, 2021

ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்; உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்; உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக இருந்தவர் முருகன். இவர் மீது பெண் எஸ்.பி ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு பாலியல் புகார் அளித்தார். உடனடியாக முருகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். காவல்துறை டிஜிபி உத்தரவின்பேரில் ஐஜி மீதான பாலியல் புகாரை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. இதற்கு டிசிபி சீமா தலைமை வகித்தார். இந்த குழு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை செய்தனர்.

சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்

அதன்பின்னர் வழக்கு விசாரணையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் எஸ்.பி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, விசாகா குழுவின் பரிந்துரையை ஏற்று வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஐஜி முருகன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு சென்றது.

தெலங்கானா போலீஸ் விசாரணை

அவர்கள் வழக்கை ஆராய்ந்து பார்த்துவிட்டு, இது தமிழ்நாடு போலீஸ் குறித்த வழக்கு என்பதால் தமிழகத்தைச் சேர்ந்த சிபிசிஐடி-யே விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளை தெலங்கானா மாநில காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதற்காக பெண் அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். தெலங்கானா மாநில டிஜிபி கண்காணிக்க வேண்டும்.

 

இந்த வழக்கில் தமிழக அரசும், புகார்தாரரான பெண் எஸ்.பியும் பதிலளிக்குமாறு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. கடந்த ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நெருங்கிய நபராக ஐஜி முருகன் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளதால் ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கை இங்கேயே விசாரிக்கலாம் என்று மாநில அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.



இதே விஷயத்தை வலியுறுத்தி பாலியல் புகார் அளித்த பெண் எஸ்.பி பிரமாண பத்திரத்தை இன்று தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் அரசு மாறியுள்ளது. எனவே இங்கு விசாரணை நடக்கும்பட்சத்தில் தனக்கு நீதி கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஆறு மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐஜி முருகன் மேல்முறையீடு செய்தார். இது நீதிபதி சுபாஷ் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கை தெலங்கானா போலீசுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad