10ஆம் வகுப்பு மாணவர்கள் ரெடியா? வகுப்பறைகளில் புதிய திட்டம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 18, 2021

10ஆம் வகுப்பு மாணவர்கள் ரெடியா? வகுப்பறைகளில் புதிய திட்டம்!

10ஆம் வகுப்பு மாணவர்கள் ரெடியா? வகுப்பறைகளில் புதிய திட்டம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் வீட்டில் இருந்த படியே ஆன்லைன் வாயிலாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. போதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்ட மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப், யூ-டியூப், ஆன்லைன் வகுப்புகள் போன்றவற்றின் மூலம் பாடம் படித்தினர். ஆனால் ஏழை, எளிய மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ச்சியான கொரோனா பாதிப்புகள் காரணமாக பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவியது.

சுழற்சி முறையில் வருகை

தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்திருக்கிறது. தினசரி பாதிப்புகள் 1,700க்கும் கீழ் சரிந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைகளின் படி, கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல்கட்டமாக 9-12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் வரவழைக்கப்பட்டுள்ளனர். வகுப்பறைகளில் 50 சதவீத மாணவர்கள் வீதம் சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விநாடி வினா போட்டி

கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரிசெய்யும் வகையில் 45 நாட்களுக்கு புத்துணர்வு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கவும் சிறப்பு விநாடி வினா போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு பொறுப்பு

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் உயர்தர தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் இந்த விநாடி வினா இணைய வழியில் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தலா 10 கேள்விகள் கேட்கப்படும். இதற்காக 1.30 மணி நேரம் ஒதுக்கப்படும். பள்ளிகளில் உள்ள கணினிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்களை குழுக்களாக பிரித்து காலை 9 முதல் மாலை 5 மணிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad