ரயில் நிலையத்தில் இதுகூட இல்லையா? கொடுமையோ கொடுமை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 18, 2021

ரயில் நிலையத்தில் இதுகூட இல்லையா? கொடுமையோ கொடுமை!

ரயில் நிலையத்தில் இதுகூட இல்லையா? கொடுமையோ கொடுமை!

தூத்துக்குடி ரயில் நிலைய நடைமேடைகளில் குடிதண்ணீர் வசதி இல்லை என்றும், தண்ணீர் விற்பனைக் கடைகளும் இல்லை என மக்கள் நீதி மய்யம் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணியின் மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு முத்துநகர் விரைவு தொடர் வண்டி மூலம் நேற்று இரவு சென்னை திரும்ப தூத்துக்குடி தொடர் வண்டி நிலையத்திற்கு வந்து நடைமேடை கடைசி பகுதிக்கு வந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த S7 பெட்டியில் இருக்கை 17இல் அமர்ந்த பிறகு தான் ஞாபகம் வந்தது தண்ணீர் வாங்கி வரவில்லை என்பது.


சரி நடைமேடையில் இருக்கும் என கடைசி பெட்டியில் இருந்து இறங்கி நடந்து போனால் எங்குமே குடிதண்ணீர் இல்லை.தொடர் வண்டி நிர்வாகம் விற்பனை செய்யும் கடையிலும் எவரும் இல்லாமல் தண்ணீரும் இல்லாமல் காலியாக இருந்தது. உடனே அருகில் இருந்த பயணச் சீட்டு பரிசோதகரிடம் கேட்டதற்கு தொடர் வண்டி நிலையத்திற்கு வெளியே சென்று தான் வாங்க வேண்டும் என்றார்.

தொடர் வண்டி புறப்பட 10நிமிடங்களே இருந்த நிலையில் வேகவேகமாக ஓடிச் சென்று தொடர் வண்டி நிலையத்திற்கு வெளியே இருந்த பெட்டிக் கடையில் தண்ணீர் குடுவை (கேன்) வாங்கி வந்தேன். இதே ஒரு வயதானவர்களோ அல்லது மாற்றுத்திறனாளிகளாகவோ இருந்தால் அவர்களின் நிலைமை என்னாகும்.

எனவ ே தொடர்வண்டி நிர்வாகம் பயணிகளுக்கு அசெளகரியம் ஏற்படாவண்ணம் நடைமேடையில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி கிடைப்பதை தொடர் வண்டி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad