தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - இன்று 1,639 பேர் பாதிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 11, 2021

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - இன்று 1,639 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - இன்று 1,639 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,639 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1 ஆயிரத்து 639 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 950 பேர் ஆண்கள், 689 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 32 ஆயிரத்து 231 ஆக அதிகரித்துள்ளது.

தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 170 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 224 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று குறைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 27 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 1 ஆயிரத்து 517 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 80 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும், 16 ஆயிரத்து 399 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad