செப்டம்பர் 19: தமிழக கொரோனா நிலவரம்..! மாவட்டம் வாரியாக - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 19, 2021

செப்டம்பர் 19: தமிழக கொரோனா நிலவரம்..! மாவட்டம் வாரியாக

செப்டம்பர் 19: தமிழக கொரோனா நிலவரம்..! மாவட்டம் வாரியாக

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,45,380 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 16,969 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 232 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 547705 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 537245 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8449 பேர் உயிரிழந்துள்ளனர்.


கோவையில் இன்று 215 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,40,241 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,35,726 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,317
பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,67,523 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,63,809 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,458 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,56,850 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4,43,98,676 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,594 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,93,074 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35,337 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad