வரும் 27ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்; விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 25, 2021

வரும் 27ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்; விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு!

வரும் 27ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்; விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் நாடு முழுவதும் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்தே, விடிந்தால் ஒரு சட்டம், இரவானால் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு வரப்படுகிறது.


கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம்

இச்சட்டங்கள் நாட்டு மக்களுக்கு நன்மை தருவதாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதாகவே இருக்கிறது. அதாவது, நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களை, அம்பானிக்கும், அதானிக்கும் தாரை வார்ப்பதில் தான் மோடி அரசு மும்முரமாக செயலாற்றி வருகிறது.

தொடர் போராட்டத்தில் விவசாயிகள்

குறிப்பாக, நாடாளுமன்ற நடைமுறைகளை புறக்கணித்து விட்டு, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்காமல், வல்லுனர்களை வைத்து ஆலோசிக்காமல், புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது மோடி அரசு. விவசாயிகளுக்கு எதிரான இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக போராடி வருகின்றனர். விவசாயிகளுடன், ஒன்றிய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு


பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. தற்போது வரை போராட்ட களத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், இன்று வரை போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றும், அவர்களின் உணர்வுகளை மதித்தும், அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கு ஒன்றிய அரசு முன்வரவில்லை என்பது வேதனையானது.

No comments:

Post a Comment

Post Top Ad