"உடனடியா இத பண்ணுங்க!" - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ்., கோரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 25, 2021

"உடனடியா இத பண்ணுங்க!" - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ்., கோரிக்கை!

"உடனடியா இத பண்ணுங்க!" - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ்., கோரிக்கை!

கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டுமென, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும் , முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் அறிக்கையில் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது என்றும், நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தடுப்பூசி போடுவது தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகளும், குளிர்சாதன வசதி இல்லாது செயல்படுவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு தமிழக அரசால் விதிக்கப்பட்டது.


இருப்பினும், தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாலும், பண்டிகை காலம் என்பதால் அனைத்து சில்லரை விற்பனை கடைகள் முன்பும் கொரோனா பாதிப்பு முன் இருந்த கூட்டத்தை நெருங்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது என்றும், சிறப்பு அங்காடிகளில் தொற்றுக்கு முன் இருந்ததை விட கூட்டம் அதிகரித்து உள்ளதாகவும், இந்த ஆண்டு மே மாதம் வெறிச்சோடிக் கிடந்த தெருக்கள் தற்போது அலை கடல் போல் காட்சி அளிப்பதாகவும், வார இறுதி நாட்களில் தங்குமிடங்கள் முழுவதும் விடுவதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இதன் காரணமாக அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு பொது மக்களும், பண்டிகைகளை முன்னிட்டு தங்களுக்கு தேவையான ஆடை, அணிகலன்களை வாங்கி செல்கின்றனர். மக்கள் இயல்பு நிலைக்கு செல்கின்றனர் சென்றுள்ளனர் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கக் கூடியது தான்.


அதே சமயத்தில் இறங்கு முகமாகவே இருந்து கொண்டிருந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது ஏற்று இறக்கமாக காணப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் பெரும்பாலான கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஆயிரத்து 559 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் 23 ஆம் தேதி நிலவரப்படி ஆயிரத்து 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 நாட்களில் 236 ஆக உயர்ந்துள்ளது. இது இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் 5.5 விழுக்காட்டிற்கும் மேல். அதேபோல செப்டம்பர் 1 ஆம் தேதியன்று 20 ஆக இருந்த உயிரிழப்பு 23 ஆம் தேதி அன்று 27 ஆக உயர்ந்திருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad