மணல் எடுத்துக்கொள்ளலாம், இனி அனுமதி தேவையில்லை - தமிழக அரசு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 25, 2021

மணல் எடுத்துக்கொள்ளலாம், இனி அனுமதி தேவையில்லை - தமிழக அரசு

மணல் எடுத்துக்கொள்ளலாம், இனி அனுமதி தேவையில்லை - தமிழக அரசு

செங்கல் சூளை வைத்திருப்போர் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் சுற்றுச்சூழல் அனுமதியுடன் மண் எடுக்கும் நடைமுறை இருந்து வந்தது. இந்தநிலையில், செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதிக்கவேண்டும் என நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை மானிய கோரிக்கையின் போது செங்கல் சூளை வைத்திருப்போர் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, '' செங்கல் சூளை வைத்திருப்போர் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக் கொள்ளலாம். மண் எடுப்பதற்கான கட்டணத்தை செலுத்தி மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மண் எடுக்கலாம்.

மண் எடுக்கும் இடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வண்ணம் மரங்களை நட வேண்டும். கிராமப்புற சாலையிலிருந்து 10 மீட்டருக்குள்ளும், தேசிய நெடுஞ்சாலை, ரயில் பாதை, ஆறுகளில் இருந்து 50 மீட்டர் வரையிலும் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் அரசு விதித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, மண் எடுப்பதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad