ஒரே நாளில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி - முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

ஒரே நாளில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி - முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

ஒரே நாளில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி - முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

தமிழகத்தில், இன்று ஒரே நாளில், 28 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதை அடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம், இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இன்று, ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த அரசு நிர்ணயித்தது. ஆனால் இலக்கையும் தாண்டி, தடுப்பூசி செலுத்தி தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. மெகா தடுப்பூசி முகாமில் தனியார் தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர், உள்ளாட்சித் துறையினர் பணியாற்றினர்.

அதிகபட்சமாக, தலைநகர் சென்னையில், 1 லட்சத்து 85 ஆயிரத்து 370 பேருக்கும், கோவையில், ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 685 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 634 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 332 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்டத்தில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 120 பேருக்கும், மதுரை மாவட்டத்தில், ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 36 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு லட்சத்து ஆயிரத்து 213 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 97 ஆயிரத்து 139 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தி.மு.க., தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:
கொரோனா தொற்றை தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இன்று 25 இலட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை. இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை.

No comments:

Post a Comment

Post Top Ad