5 மணிக்கு மனு; நள்ளிரவு 12மணிக்கு தீர்ப்பு: நீட் தேர்வு ஏழுதிய மதுரை மாணவி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

5 மணிக்கு மனு; நள்ளிரவு 12மணிக்கு தீர்ப்பு: நீட் தேர்வு ஏழுதிய மதுரை மாணவி!

5 மணிக்கு மனு; நள்ளிரவு 12மணிக்கு தீர்ப்பு: நீட் தேர்வு ஏழுதிய மதுரை மாணவி!

நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு திட்டமிட்டபடி நீட் தேர்வுகள் நடைபெற்றது. இந்த நிலையில், நள்ளிரவில் வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பையடுத்து மதுரை மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை ஷெனாய் நகரைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுர் எஸ்.வெங்கடேசனின் மகள் சண்முகப்பிரியா, இவர் மருத்துவராகும் கனவோடு ஏற்கனவே நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், அதில் தோல்வியடைந்த காரணத்தால் நடப்பாண்டு நீட் தேர்வுக்கும் விண்ணப்பித்து ஆயத்தமாகி வந்துள்ளார்.

இந்த நிலையில், தேர்வு எழுதுவதற்கான நுழைவுச் சீட்டை ஆன்லைனில் நேற்று அவர் பதிவிறக்கம் செய்துள்ளார். நுழைவுச் சீட்டில் வரிசை எண் பெயர், தந்தை பெயர், பாலினம், விண்ணப்ப எண் எல்லாம் சரியாக இருந்த நிலையில், அவரது புகைப்படத்துக்குப் பதில் வேறு ஒரு மாணவரின் புகைப்படமும், கையெழுத்தும் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடிய தேசியத் தேர்வுகள் முகமைக்கு மின்னஞ்சல் வழியாகப் புகார் அனுப்பினார். தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டார். ஆனால், எந்த பயனும் இல்லாததால், வழக்கறிஞர் எம்.சரவணன் மூலம் நேற்று மாலை 5 மணிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை நிர்வாக நீதிபதி எம்.துரைசாமி உத்தரவின் பேரில் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் நேற்று இரவு 9.15 மணிக்கு விசாரிக்கத் தொடங்கினார்.

விசாரணையின் முடிவில், மாணவி சண்முகபிரியாவை மதுரை வீரபாஞ்சன் சோலைமலை பொறியியல் கல்லூரி நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். நள்ளிரவு 12.15 மணிக்கு வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து, மாணவிக்கு உத்தரவின் நகல் இரவு 1.30 மணியளவில் வழங்கப்பட்டது. இதையடுத்து, மாணவி சண்முகப்பிரியா நீட் தேர்வை எழுதினார்.

No comments:

Post a Comment

Post Top Ad