வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 20, 2021

வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்துக்கு அதிகளவில் தடுப்பூசி தேவைப்படும் நிலையில், குறைவான அளவே தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்பாக தகுதியுள்ள அனைவருக்கும் இத்தடுப்பூசிகளைப் போடுவதற்காக வாரம்தோறும் 50 இலட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டுமென்று கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தமிழகத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை, தேசிய சராசரியை விடக் குறைவாக உள்ளது. இதனால் கடந்தகாலப் பற்றாக்குறையை ஈடுசெய்ய, தமிழகத்துக்கு உடனடியாகக் கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுவதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம், சுமார் 45.42 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இந்த மாதத்தின் முதல் 19 நாட்களில் சுமார் 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. எனினும் தமிழகத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை, தேசிய சராசரியை விடக் குறைவாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை மத்திய அரசு சார்பில் 3.97 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், மாநிலத்தில் மக்கள்தொகை மற்றும் இதுவரை தடுப்பூசி செலுத்தாத மக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்பாகத் தகுதியுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசிகளைப் போட வேண்டியுள்ளது. எனவே, வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டுமென்று தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad