பள்ளி மாணவர்களுக்கு கொரோனா: மூன்று நாட்கள் விடுமுறை!
தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள்
மன சோர்வில் இருந்து விடுபட்டிருந்தாலும், பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள், ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.
காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும், தனியார் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து, அப்பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு
படிக்கும் மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேசமயம், கிருமி நாசினி கொண்டு பள்ளி முழுவதும் கிருமி நாசம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து பள்ளிக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment