6 மாதங்களில் 4 பா.ஜ.க., முதல்வர்கள் ராஜினாமா! - என்ன நடக்கிறது பா.ஜ.க.,வில்?
நடப்பு ஆண்டில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 4 முதலமைச்சர்கள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், முதலமைச்சராக இருந்த பா.ஜ.க.,வைச் சேர்ந்த விஜய் ரூபானி, இன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தலைநகர் காந்தி நகரில்,
மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தை நேரில் சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை, விஜய் ரூபானி வழங்கினார். குஜராத் மாநிலத்தில், அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய் ரூபானி ராஜினாமா செய்திருப்பது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
ராஜினாமா செய்தது ஏன்?
ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் ராஜினாமா கடிதத்தை அளித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ரூபானி, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் குஜராத் மாநிலத்தின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிந்தது. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள்
மாறுவது எல்லாம் இயற்கையான ஒன்று. எனது ராஜினாமாவின் மூலம் குஜராத் மாநிலத்திற்கு புதிய தலைவர் கிடைப்பார். புதிய தொலைநோக்கு திட்டங்களுக்கு புதிய தலைமை தேவை. பா.ஜ.க., தேசியத் தலைமையின் கீழ் எனது கட்சிப் பணியை தொடருவேன் என, தெரிவித்தார்.
6 மாதங்களில் 4 பா.ஜ.க. முதல்வர்கள் ராஜினாமா
விஜய் ரூபானியின் ராஜினாமாவைத் தொடர்ந்து, நடப்பு 2021ம் ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில், ராஜினாமா செய்த பா.ஜ.க. முதலமைச்சர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம், கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த பா.ஜ.க.,வின் எடியூரப்பாவின் மீது அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்புத் தெரிவித்தை அடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றுக் கொண்டார். இங்கு, 2023ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment