பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து - ஒருவர் பலி; 60-க்கும் மேற்பட்டோர் மாயம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து - ஒருவர் பலி; 60-க்கும் மேற்பட்டோர் மாயம்!

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து - ஒருவர் பலி; 60-க்கும் மேற்பட்டோர் மாயம்!

அசாம் மாநிலத்தில், பிரம்மபுத்திரா நதியில், இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், பெண் ஒருவர் பலியானார். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் நதியில மூழ்கி மாயமாகினர்.

வட கிழக்கு மாநிலமான அசாமில், பிரம்மபுத்திரா நதியில், மஜூலி என்ற இடத்தில் இருந்து பயணிகள் படகு ஒன்று, நிமதி படித்துரை நோக்கி சென்று கொண்டிருந்தது. எதிர் திசையில் மற்றொரு படகு சென்றது. ஜோர்ஹாட் பகுதியில் இரண்டு படகுகளும் வந்த போது திடீரென்று மோதிக் கொண்டன.

இந்த விபத்தில், படகுகளில் பயணித்த பலர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படகில், 200க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். தகவல் அறிந்த மாநில மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 60-க்கும் அதிகமானோர் காணவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

படகு விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அசாம் மாநிலத்தில் படகு விபத்து குறித்த செய்தி கவலை அளிக்கிறது. மாயமான பயணிகளை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad