தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்; வெளியான அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 27, 2021

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்; வெளியான அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்; வெளியான அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதில், உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவும், தேர்தல் நடத்த ை விதிகளின்படி தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கிகள் போன்றவற்றில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தவும், முறைப்படுத்தவும் பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி,

ஒலி பெருக்கி பயன்படுத்த கட்டுப்பாடு

* தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடைபெறும் நாள் வரை, தேர்தல் பிரச்சாரங்களுக்காக எந்தவொரு வகை வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலி பெருக்கிகளை காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

* எந்தவொரு பொதுக் கூட்டங்களுக்கு அல்லது ஊர்வலங்களுக்கு ஒலி பெருக்கிகளை பயன்படுத்த வேண்டுமெனில் காவல்துறையிடம் எழுத்து மூலமாக முன் அனுமதி பெற வேண்டும்.

காவல்துறை மூலம் நடவடிக்கை

* ஒலி பெருக்கிகளை பொது அமைதிக்கு இடையூறு ஏற்படாதவாறு அனுமதிக்கப்பட்ட காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* மேற்கண்ட விதிகளை மீறினால் அனைத்து கருவிகளும் பறிமுதல் செய்யப்படும். மேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad