சிக்கன் சமைக்க மறுத்த மனைவி - அடித்து கொன்ற "பாசக்கார" கணவன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 1, 2021

சிக்கன் சமைக்க மறுத்த மனைவி - அடித்து கொன்ற "பாசக்கார" கணவன்!

சிக்கன் சமைக்க மறுத்த மனைவி - அடித்து கொன்ற "பாசக்கார" கணவன்!

மத்திய பிரதேச மாநிலத்தில், சிக்கன் சமைக்க மறுத்த மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. "பாசக்கார" கணவனை, போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் ஷாதுல் மாவட்டம் சிமரியாத்லா கிராமத்தைச் சேர்ந்தவர் கமலேஷ் கோல் (40). இவரது மனைவி பெயர் ரம்பை கோல் (32). கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி, வீட்டில் மர்மமான முறையில் ரம்பை கோல் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ரம்பை கோலை அவரது கணவர் கமலேஷ் கோல் அடித்துக் கொன்றது தெரிய வந்துள்ளது. கடந்த 23-ம் தேதி இரவு வீட்டிற்கு வந்த கமலேஷ் கோல், தனது மனைவி ரம்பை கோலிடம் சிக்கன் சமைத்து தரும்படி கேட்டுள்ளார். இதற்கு ரம்பை கோல் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இதனால், கணவன் - மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கமலேஷ் கோல், தனது மனைவியின் தலையில் உருட்டுக் கட்டையால் பலமாக தாக்கி உள்ளார். இந்த தாக்குதலில் ரம்பை கோல் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். மனைவியை தாக்கியதை மறைத்த கமலேஷ் கோல், தனது மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

ஆனால், பிரேத பரிசோதனையில் ரம்பை கோலின் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்து கமலேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சிக்கன் சமைக்க மறுத்ததால் ஏற்பட்ட கோபத்தில் மனைவியை அடித்துக் கொன்றதை கமலேஷ் ஒப்புக் கொண்டார். இதையடுத்து கமலேஷை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad