தலைதூக்கும் கொரோனா: மீண்டும் அமலாகும் இரவு நேர ஊரடங்கு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 1, 2021

தலைதூக்கும் கொரோனா: மீண்டும் அமலாகும் இரவு நேர ஊரடங்கு!

தலைதூக்கும் கொரோனா: மீண்டும் அமலாகும் இரவு நேர ஊரடங்கு!

அசாம் மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து, இரவு நேர ஊரடங்கை பிறப்பித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் மட்டும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. அம்மாநிலத்தில் மட்டும் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரமாக உள்ளது. இதை அடுத்து அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வட கிழக்கு மாநிலமான அசாமில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை பிறப்பித்து அம்மாநில பா.ஜ.க. அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏழு நாட்களில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10க்கும் அதிகமாக உள்ள இடங்களை கண்டறிந்து, அவற்றை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவை இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

100 சதவீத இருக்கை வசதிகளுடன், கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக் கொண்ட பயணிகளுடன், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதே போல், 100 சதவீத இருக்கை வசதிகளுடன், கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக் கொண்ட பயணிகளுடன், மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad