கரையை கடக்கும் குலாப் புயல்: தமிழகத்தில் செம மழை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 26, 2021

கரையை கடக்கும் குலாப் புயல்: தமிழகத்தில் செம மழை!

கரையை கடக்கும் குலாப் புயல்: தமிழகத்தில் செம மழை!

கடந்த 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருமாறியது. வழக்கமாக வங்க கடல், அரபிகடலில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு அதனை சுற்றியுள்ள 13 நாடுகள் பெயர் சூட்டுவது வழக்கம். அந்தவகையில் தற்போது உருவாகியிருக்கும் இந்த புயலுக்கு ‘குலாப்’ என்று பாகிஸ்தான் பெயர் சூட்டியுள்ளது.


தென்மேற்கு பருவமழை காலமான செப்டம்பர் மாதத்தில் புயல் ஏற்படுவது அரிதான ஒன்று கூறப்படுகிறது. 2005ஆம் ஆண்டில் பியார், 2018ஆம் ஆண்டில் டாயி ஆகிய புயல்களை தொடர்ந்து தற்போது குலாப் புயல் ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த குலாப் புயலானது வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டிய கலிங்கப்பட்டினம்-கோபால்பூருக்கு இடையே இன்று மாலை கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும்.

தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நாளை மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வருகிற 28,29ஆகிய தேதிகளில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக கடலூர், சென்னை, நாகை, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad