ரவுடிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 26, 2021

ரவுடிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை!

ரவுடிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை!



தமிழ்நாட்டில் குற்றங்களை தடுக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் அதிரடி சோதனைகளை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்படி மேற்கொண்டு வருகிறது காவல்துறை. கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தணிக்கை செய்வது, இரவு முழுவதும் தீவிர ரோந்து பணி, வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்தல் கிரிமினல் பின்னணி கொண்டவர்களின் வீடுகளில் சோதனை என அதிரடி சோதனைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



ஸ்டார்மிங் ஆபரேஷன் - Storming Operation எனும் பெயரில் நடைபெற்று வரும் இந்த சோதனைகளின் மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 52 மணி நேரத்தில் 3325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் செப்டம்பர் 23ஆம் தேதி இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 52 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் 21,592 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின்படி கைதானவர்கள் 294 பேர். பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 972 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். நன்னடத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டு 2526 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள் 7, கத்திகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் 1,110 என மொத்தம் 1,117 ஆயுதங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கொலைக் குற்றஙளில் ஈடுபடுகின்ற ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு அந்த அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad