உள்ளாட்சி தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அறிவிப்பு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அறிவிப்பு..!

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அறிவிப்பு..!

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை 9 மாவட்டங்களில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கியுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு தயாராகிவரும் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.
அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், சிற்றூராட்சி தலைவர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கீழ்காணும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

வேலூர் மாநகர் & புறநகர் : கேபி முனுசாமி, அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, எஸ்ஆர்கே அப்பு, வேலழகன்


காஞ்சிபுரம்: திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா, காமராஜ், பெஞ்சமின், சோமசுந்தரம்

திருப்பத்தூர்: செங்கோட்டையன், அன்பழகன், கருப்பணன், கேசி வீரமணி

செங்கல்பட்டு கிழக்கு & மேற்கு : பி. தங்கமணி, பா. வளர்மதி, மாஃபா. பாண்டியராஜன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், எஸ். ஆறுமுகம், கேபி கந்தன்

ராணிப்பேட்டை: எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், சு, ரவி


நெல்லை: தலைவாய்சுந்தரம், கருப்பசாமி பாண்டியன், கே. பரமசிவன், இசக்கி சுப்பையா, சீனிவாசன், இன்பதுரை, கணேசராஜா

விழுப்புரம்: ஓ.எஸ். மணியன், சி.வி. சண்முகம்

தென்காசி வடக்கு & தெற்கு: ஆர்பி உதயகுமார், மனோஜ் பாண்டியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, கிருஷ்ணமுரளி, செல்வமோகன்தாஸ் பாண்டியன்

கள்ளக்குறிச்சி: எம்சி. சம்பத், சி. விஜயபாஸ்கர், இரா. குமரகுரு

ஆகிய முன்னாள் மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களை சேர்ந்த அனைத்து நிலை அதிமுக நிர்வாகிகளும் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.


மேலும், அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad