ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு; இன்னும் மூனு வருஷம் வேலை செய்யலாம்!
தமிழகத்தில்
கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து, மாணவர்களின் கற்றல் பாதிக்கக்கூடாது என்று கருதி பள்ளிகளை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். கடந்த ஒன்றாம் தேதி முதல் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதையொட்டி பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் பிரத்யேகமாக வெளியிடப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆன நிலையில், சில பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானதை பார்க்க முடிந்தது.
பள்ளி வேலை நேரம்
சம்பந்தப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் சம்பந்தப்பட்ட பள்ளிகள் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் பள்ளிகள் செயல்படும் வேலை நேரம் தொடர்பாக குழப்பம் நீடித்து வந்தது. அதாவது, பள்ளிகள் மாலை 3.30 மணிக்கு முடிவடையும் என்றுபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
No comments:
Post a Comment