திமுகவினர் திசை திருப்புறாங்க: கொந்தளித்த காயத்ரி ரகுராம்
ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் நடத்திய இந்தப் போராட்டத்தை துப்பாக்கிச் சூடு மூலம் மிக மோசமாக அடக்க நினைத்தது ஒன்றிய அரசு.
இந்த சட்டத்துக்கு எதிராக திமுக
உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (செப்டம்பர் 8), மானிய கோரிக்கையின் போது ஒன்றிய அரசின் சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிஏஏ தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.அப்போது, இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் நால்வரும் வெளிநடப்பு செய்தனர். இந்த தீர்மானம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள்
கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக பிரபலம் காயத்திரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் வாழும் குடும்பங்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள்.
No comments:
Post a Comment